Published : 04 May 2019 12:28 PM
Last Updated : 04 May 2019 12:28 PM
சீமான், தினகரன், கமல்ஹாசன் போன்றவர்கள் இப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்னர் சலித்துப் போய் உட்கார்ந்து விடுவார்கள் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "கமல்ஹாசன் போன்றவர்களை மக்கள் இனிமேல் நம்ப மாட்டார்கள். அதற்கு அடிப்படையில் ஆழமான மக்கள் சிந்தனை, அமைப்பு ரீதியான கடுமையான உழைப்பு, தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை என அனைத்தும் வேண்டும்.
புதிதாக வரும்போது எப்போதுமே சில சலசலப்புகள் இருக்கும். டார்ச் லைட் பேட்டரி பவர்ஃபுல்லாக இருக்கும் போது தான் எரியும். பிறகு, பேட்டரி தீர்ந்தவுடன் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்.
எல்லா புதிய கட்சிகளுக்கும் அதே நிலைமை தான். சீமான், தினகரன், கமல்ஹாசன் எல்லோருமே இப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்னர் சலித்துப் போய் உட்கார்ந்து விடுவார்கள" என தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT