Published : 11 May 2019 09:29 PM
Last Updated : 11 May 2019 09:29 PM

ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் செயின் பறிக்க முயற்சி: 2 இளைஞர்களுக்கு போலீஸ் வலை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் தங்கச்சங்கிலியைப் பறிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த 2 இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

திமுக அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர் நேற்றிரவு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது  இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து சுதாரித்த சம்பூரணம் நகையை தன் கைகளால் பற்றிக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் கேட்டு அக்கம்பக்கமிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

இதைப் பார்த்த செயின் பறிப்பு இளைஞர்கள் நகை பறிக்கும் முயற்சியை விட்டுவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் மின்னலென வேகமாக தப்பிச் சென்றனர்.

இது சம்பந்தமாக ஆர்.எஸ்.பாரதியின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செயின்பறிக்க முயன்ற இளைஞர்களைத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரித்து இளைஞர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x