Published : 06 May 2019 04:05 PM
Last Updated : 06 May 2019 04:05 PM
ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதி யாரும் தமிழ் நாட்டில் இல்லை. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் தகுதியுள்ளவர் ஸ்டாலின் என துரைமுருகன் பேசினார்.
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், ''திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் கிடையாது. அவரைப் போல் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள் யாரும் கிடையாது.
பொதுமேடையில் காரண காரியங்களை அடுக்கி வைத்துப் பேசுவதில், தைரியமாக கருத்துகளைச் சொல்வதில், சட்டப்பேரவையில் அமைச்சர்களைத் தோலுரித்துல் காட்டுவதில், நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் ஊழலைப் பட்டியல் போட்டு விளக்குவதில் ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான். இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகக்கூட வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் ஸ்டாலின்'' என துரைமுருகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT