Published : 10 Apr 2019 10:58 AM
Last Updated : 10 Apr 2019 10:58 AM

பாஜக, அதிமுகவுக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகம்: 3 இளைஞர்கள் கைது

பாஜக, அதிமுகவுக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் நேற்று முன்தினம் அரசு கலைக்கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அரசு கலைக்கல்லூரி அருகே மூன்று இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, பாஜக, அதிமுகவுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தனர்.

காவல்துறையினர் மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர். அதில், பிடிபட்ட வர்கள் பீளமேடு ஹோப்காலேஜை சேர்ந்த அஸ்வின் (24), துடியலூரை சேர்ந்த நந்தன் (25), புலியகுளத்தை சேர்ந்த கதிரொலி (25) எனவும், புரட்சி கர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி துண்டுபிரசுரம் விநியோகித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர், மூன்று பேரையும் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x