Published : 16 Apr 2019 11:19 AM
Last Updated : 16 Apr 2019 11:19 AM

22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும்: ஸ்டாலின்

அடுத்து வரும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் மத்தியில் மட்டுமல்ல மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடத்திலே வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"22 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் நாம் தான் வெற்றிப் பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஏற்கெனவே சட்டப்பேரவை திமுக கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை சேர்த்து 97 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றது. 22 தொகுதிகளிலும் வெற்றிபெறும் பொழுது, நம் எண்ணிக்கையைப் பார்த்தால் 119. எனவே, தமிழகத்தின் ஆட்சிக்கு, 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 117 கூடுதலாக ஒன்று. ஒன்று அதிகம் இருந்தால் ஆட்சி தான், நாம் எண்ணிக்கையில் பார்க்கின்ற பொழுது நாமக்கு 119 இடங்கள் வருகின்றோம். அப்படி வருகின்ற போது யார் ஆட்சி?

ஜூன் மூன்றாம் தேதி தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள். இந்தத் தேர்தல் முடிந்து, முடிவுகள் மே மாதம் எண்ணப்பட்டு புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் எப்பொழுது எடுக்கின்றார்கள் என்றால் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளன்று தான். தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளன்றே நாம் மிகவும் கொண்டாட்டத்தோடு ஒரு பெரிய மாற்றத்தோடு இந்தியாவில் காண இருக்கின்றோம். எனவே மத்தியில் இருக்கக்கூடிய மோடியை மட்டும் வீழ்த்தவில்லை, மோடியை வீழ்த்தக்கூடிய அதே நேரத்தில் இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியையும் வீழ்த்த போகின்றோம்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x