Published : 01 Apr 2019 01:48 PM
Last Updated : 01 Apr 2019 01:48 PM

வேலூரில் அட்டைப்பெட்டிகள், சாக்குமூட்டைகளில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்: வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை

வேலூரில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் குடோன் ஒன்றில் அட்டைப்பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்த ரூபாய் நோட்டு பண்டல்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அவை பண்டல் பண்டலாக பேப்பரில் சுற்றப்பட்டு அதன்மீது வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண், வார்டு பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. கடந்த 29-ம் தேதி துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியது.

நாங்கள் அப்பழுக்கற்றவர் என்பதை தெரியவைத்த வருமான வரித்துறைக்கு நன்றி. மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். எங்களை இந்த சோதனை ஒன்றும் செய்யாது என துரைமுருகன் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் உள்ள முக்கியக் கல்லூரியிலிருந்து இந்தப் பணம் குடோனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் கருதுகின்றனர். இதையடுத்து கதிர் ஆனந்தை கல்லூரிக்கு வரவழைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் சோதனையும் நடந்து வருகிறது.

துரைமுருகன் பிஏ அஸ்கரி அலி இல்லம், கட்சி நிர்வாகி சீனிவாசன், பெருமாள் உள்ளிட்டோர் இல்லங்களிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே இந்தப் பணம் யாருடையது என்பது தெரியவரும்.

ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x