Published : 29 Sep 2014 09:46 AM
Last Updated : 29 Sep 2014 09:46 AM

திருப்பதி ரயில்களில் அலைமோதும் கூட்டம்

திருமலை வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், முக்கியமான பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்விழாக்களில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், திருப்பதிக்கு செல்கின் றனர்.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால், பேருந்துகளில் கூட்டம் குறைந்துள்ளது.

இதனால், தி.மலை வழியாக இயக்கப்பட்ட புதுச்சேரி- திருப்பதி மற்றும் மன்னார்குடி- திருப்பதி விரைவு ரயில்கள், விழுப்புரம்- திருப்பதி பயணிகள் ரயில்களில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களில் திருப்பதிக்கு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x