Published : 14 Sep 2014 01:21 PM
Last Updated : 14 Sep 2014 01:21 PM
திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.
முன்பக்க டயர் வெடித்ததால் கார் தாறுமாறாக ஒடி கட்டுப்பாடு இழந்ததால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சின்னாபின்னமானது.
கொடைக்கானல் அருகே தண்டிகுடியில் உள்ள தங்கள் உறவினரைச் சந்திக்க சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் விவரம்: வெங்கடாச்சலம் (37), இவர் மனைவி கீதா (35), கீதாவின் சகோதரி பானு (42), வெங்கடாச்சலம் மகன் பாலாஜி (11), ஓட்டுனர் மோகன் மற்றும் வெங்கடாச்சலத்தின் உறவினர் சாந்தி (41).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT