Last Updated : 26 Apr, 2019 02:05 PM

 

Published : 26 Apr 2019 02:05 PM
Last Updated : 26 Apr 2019 02:05 PM

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 430 இடங்களையும் பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 430 இடங்களைப் பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் தாமிரபரணி நதிக்கரையில் அகழாய்வு நடத்தக்கோரி முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூர் அகழாய்வின் அறிக்கையைத் தயார் செய்ய 8 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியைத் தொடர தமிழக அரசு விரும்புகிறது. சிவகளையில் அகழாய்வு நடத்த முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள  வரலாற்றுச் சிறப்புமிக்க 430 தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டும். அகழாய்வு தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x