Published : 10 Apr 2019 07:45 AM
Last Updated : 10 Apr 2019 07:45 AM

கும்மிடிப்பூண்டி அருகே 175 கிலோ தங்கம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றை போலீஸார் சோதனை செய் தனர். அப்போது, அந்த காரில், 175 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீ ஸார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரிசர்வ் வங்கி அனுமதியுடன், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கக் கட்டிகள், ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டு, விற்பனைக்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆயுதம் தாங்கிய காவலருடன் 175 கிலோ தங்கக் கட்டிகளை, வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக சென்னை விமான நிலையத் துக்கு, உரிய ஆவணங்களுடன் எடுத்துச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

இருப்பினும் போலீஸார், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான பார்வதியிடம் தங்கக் கட்டிகளை ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x