Published : 08 Apr 2019 11:13 AM
Last Updated : 08 Apr 2019 11:13 AM
அழகிரியே திமுக தலைவராகியிருக்க வேண்டும் என முதல்வர் இருந்த மேடையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார்.
திண்டுக்கல்லை அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு தாரை வார்த்திருக்கிறது. பாமக சார்பில் இத்தொகுதியில் ஜோதி முத்து வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார்.
பாமக வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "அழகிரியே திமுக தலைவராகியிருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி மறைவுக்குப் பின்னர், கட்சியை ஸ்டாலின் கடத்திவிட்டார்.
கருணாநிதி இருந்தபோதே ஸ்டாலின் தந்திரமாக செயல்பட்டு கட்சியைக் கைப்பற்றிவிட்டார். அழகிரியை கட்சித் தலைவராக்குவதற்குப் பதிலாக அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பினார்.
கட்சி விரோத செயல்களில் அழகிரி ஈடுபடுவதாகக் கூறி அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதை உறுதி செய்தார். அதன் பின்னர் தானே கட்சிக்கு தலைவராகிவிட்டார். திமுக தொண்டர்கள் இதனை நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.
திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் ப.வேலுச்சாமி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT