Published : 29 Sep 2014 03:34 PM
Last Updated : 29 Sep 2014 03:34 PM
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை செவ்வாய்கிழமை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
இதனையொட்டி நாளை மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாங்கள் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம்.
இந்தத் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. ஆனால், திரைத்துறைக்கு அவர் நிறைய நன்மை செய்துள்ளார். அவருக்கு எங்களால் திருப்பிச் செய்ய முடிந்தது இந்த ஆதரவு மட்டுமே என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT