Last Updated : 27 Mar, 2019 06:49 AM

 

Published : 27 Mar 2019 06:49 AM
Last Updated : 27 Mar 2019 06:49 AM

தேர்தல் பணியில் முதல்முறையாக அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள்

தமிழகத்தில் முதல்முறையாக மக்களவைத் தேர்தல் பணியில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமே  ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஏதாவது அரசியல் சார்புடைய தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால் அவர்களைத் தேர்தல் பணிக்கு தேர்வு செய்வதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஏப். 18-ல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முதல்முறையாக அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகப் பணியாளர்கள் தேர்தல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் கண்காணிப்பாளர் வரை பணியில் இருப்பவர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர் 1, 2, 3 ஆகிய பணிகளில் நியமிக்கப்பட உள்ளனர். மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் பணியில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் சுமார் நூறு பேர்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் தேர்தல் அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். ஏப். 7, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x