Published : 29 Mar 2019 05:41 AM
Last Updated : 29 Mar 2019 05:41 AM
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர் தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமை யாக அமல்படுத்தி வருகிறது. தேர்தல் செலவினத்தில் கவனிக்கப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், கண் காணிப்பை அதிகரிக்க கூடுதல் செல வினப் பார்வையாளர் மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில், காவல்துறை டிஜிபி, வருமான வரித்துறை இயக்கு நர் ஜெனரல், சுங்கத்துறை உள் ளிட்ட பல்வேறு துறை அதிகாரி களுடன் அவர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை ஆவணங் களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 கோடியே 70 லட்சம் ரொக்கம், 223.5 கிலோ தங்கம், 346.7 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. தங்கம், வெள்ளி இவற்றின் மொத்த மதிப்பு ரூ.69 கோடியாகும். ரூ.19 கோடி ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வகையில், திமுக மீது 10, அதிமுக - 9, பாஜக - 2, பாமக - 3, சுயேச்சைகள் - 17, மக்கள் நீதி மய்யம் - 3 என 44 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
நாளை (இன்று) மாலை 3 மணிக் குள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற லாம். அதைத் தொடர்ந்து சுயேச்சை களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கும். அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சின் னம் ஒதுக்கும் பணியை மேற்கொள் வார்கள். அமமுகவுக்கு ஒரு பொது வான சின்னத்தை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத் துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவெடுக்கும். அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியோ, பதிவு செய்யப்பட்ட கட்சியோ இல்லை. எனவே சுயேச்சை வேட்பாளர்களா கவே கருதப்படுவார்கள். அமமுக அளிக்கும் வேட்பாளர் பட்டியலைப் பரிசீலித்து, சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT