Published : 17 Mar 2019 10:57 AM
Last Updated : 17 Mar 2019 10:57 AM

தொகுதி இல்லாத 3 மாவட்டங்கள்

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்த மக்களவைத் தொகுதிகள் மாவட்டத் தலைநகரில் அமையாமல் வேறு பகுதியில் இருந்தன. 2009-ல் மறுசீரமைப்புக்கு பிறகு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 10 மாவட்ட தலைநகரங்களின் பெயர்களில் புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 29 மாவட்டத் தலைநகரங்களில் மக்களவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. தொகுதி மறுசீரமைப்பில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. தற்போது சென்னையில் 3 தொகுதிகள், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 2 தொகுதிகள் அமைந்துள்ள நிலையில், மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களின் தலைநகரங்களிலோ, மாவட்டங்களிலோ ஒரு மக்களவைத் தொகுதிகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x