Published : 02 Mar 2019 08:43 AM
Last Updated : 02 Mar 2019 08:43 AM

கோடநாடு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஷயான், மனோஜ் கைது 

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஷயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், ஷயான் மற்றும் மனோஜ் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதால், இருவரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 18-ம் தேதி வந்தபோது, ஷயான் மற்றும் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருவரின் ஜாமீனையும் ரத்து செய்த நீதிபதி பி.வடமலை, இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இருப்பினும், ஷயான், மனோஜ் ஆகியோர் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடமாடி வந்ததை போலீஸார் கண்காணித்து வந்தனர். நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார், ஷயான் மற்றும் மனோஜை கேரளாவில் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x