Published : 27 Sep 2014 08:29 AM
Last Updated : 27 Sep 2014 08:29 AM
சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளார்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வருமா னத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக் கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக் கையும் தாக்கல் செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.
மூன்று தரப்பு வாதங்களையும், வழக்கு சம்பந்தமான சுமார் 25 ஆயிரம் பக்க ஆவணங்களையும் 29 நாட்கள் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆராய்ந்து சுமார் 1200 பக்க தீர்ப்பை தயாரித்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மூல வழக்கில் தீர்ப்பு வெளியாகும் இன்றே, வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 32 தனியார் நிறுவனங்கள் தொடர்பாகவும், ஜெயலலிதா மீதான கூட்டுசதி குற்றச்சாட்டு தொடர்பாகவும் தீர்ப்பு வெளியாகிறது.
11 மணிக்கு தெரியும்
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரமே காத்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இந்த தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு தெரியவரும்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் காலை 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூர் வருகின்றனர். நேற்றிரவே விமானம் மூலம் சுதாகரனும் பெங்களூர் வந்துள்ளார். காலை 10.30 மணி அளவில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருக்கிறார்கள்.
வரலாறு காணாத பாதுகாப்பு
சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தமிழக எல்லையான ஓசூரில் தங்கியுள்ளனர். 6000 போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தமிழக எல்லையில் இருந்து பெங்களூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றன. பஸ், ரயில் மற்றும் விமானம் மூலமாக பெங்களூர் வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT