Published : 15 Sep 2014 03:15 PM
Last Updated : 15 Sep 2014 03:15 PM

ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.2 லட்சம் நிதியுதவி

ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணம் பணிகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலக்குழு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் கடுமையான பாதிப்பிற்குள்ளான அம்மாநில மக்களுக்கு ஆதரவு அளித்திடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு 'ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரண பணிக்கு' இந்தியா முழுவதும் பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தாராளமாக நிதியுதவி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

மத்தியக்குழுவின் இந்த வேண்டுகோளின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இன்று (15.9.2014) ரூ.2 லட்சத்தை ஜம்மு-காஷ்மீர் மாநில வெள்ள நிவாரண பணிக்கு கட்சியின் மத்தியக் குழுவிற்கு அனுப்பியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x