Published : 19 Feb 2019 08:46 AM
Last Updated : 19 Feb 2019 08:46 AM

தமிழகம், புதுவையில் 2 நாள் மழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தெலங்கானா பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவி வருகிறது. அதனுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குமரிக் கடல் வரை, தமிழகத்தின் உள்பகுதி வழியாக நிலவி வருகிறது. மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தின் உள்பகுதியில் நிலவி வருகிறது. இவை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினத்தில் 3 செமீ, நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 2 செமீ, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x