Published : 29 Sep 2014 03:40 PM
Last Updated : 29 Sep 2014 03:40 PM

பெங்களூர் விரைகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பெங்களூர் செல்கிறார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் இன்று மாலை 4.45 மணி விமானத்தில் பெங்களூர் செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் செல்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. தீர்ப்புக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x