Published : 14 Feb 2019 10:12 AM
Last Updated : 14 Feb 2019 10:12 AM

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு: திருப்பாம்புரத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள் ளம், திருப்பாம்புரம் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திரு நாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் நாகவல்லி, நாககன்னி ஆகிய துணைவியருடன் மங்கள ராகுவாக, ராகு பகவான் அருள் பாலித்து வருகிறார். இங்கு, ராகு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற் றது. நேற்று மதியம் 1.24 மணிக்கு ராகு பகவான் கடக ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். முன்னதாக, கோயில் வளாகத்தில் நேற்று காலை பூர்ணாஹூதி, தொடர்ந்து புனித நீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, ராகு சன்னதியில் பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத் தப்பட்டது. தொடர்ந்து, ராகு பெயர்ச் சியின்போது மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ரிஷபம், மிது னம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக் காரர்கள் பரிகார பூஜையில் பங் கேற்று வழிபட்டனர். பின்னர், நேற்று இரவு வெள்ளி சேஷ வாகனத்தில் ராகு பகவான் வீதியுலா நடைபெற் றது. 2-ம் கட்ட லட்சார்ச்சனை இன்று (பிப்.14) தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கேது பகவான் கும்ப ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது தலமான சவுந்திரநாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் நேற்று மதியம் விக்னேஷ்வர பூஜை, ராசி பரிகார சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கேது பகவானுக்கு பால், சந்தன அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

திருப்பாம்புரம்

இதேபோல, தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் ராகு-கேது தல மான திருப்பாம்புரம் சேஷபுரீஸ் வரர் கோயிலில் பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி ராகு-கேது பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் 2.02 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, இன்று (பிப்.14) ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x