Published : 21 Feb 2019 08:21 AM
Last Updated : 21 Feb 2019 08:21 AM

கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு: மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாத கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை மதுரையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம்தேதி தொடங்கினார். வரவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக, சில நாட்களுக்கு முன்புபுதுச்சேரியில் கட்சி தொடங்கப்பட்டு கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டுநிறைவு பெறுவதால், இன்று காலை7.45 மணி அளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைஅலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியேற்றுகிறார். மாலை 3.30 மணிஅளவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி வெள்ளபள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு வலைகளை வழங்கும் கமல்ஹாசன், மாலை 6.30 மணி அளவில் திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

மக்களவைத் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் வெளியானது. இதுதொடர்பாக கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, “கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. வரும் 24-ம் தேதி நெல்லையில் கட்சியின் ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு வந்தாலும் வரலாம். இதனை கமல்ஹாசன்தான் முடிவு செய்வார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது. கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்புள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல செல்வாக்கு கிடைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு. அதில் கமல்ஹாசன் நிச்சயமாக போட்டியிடுவார். முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, அவரது லட்சியம். வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x