Published : 07 Jan 2019 07:41 AM
Last Updated : 07 Jan 2019 07:41 AM

நெல்லையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் தந்த தாய்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வரின் இதயம், கண்கள், சிறுநீர கங்கள், கல்லீரல், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் விக்கி ரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சாரதா. இவரது கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். தனது ஒரே மகன் பழனிகுமாருடன் (39) வசித்துவந் தார். எம்காம் பட்டதாரியான பழனி குமார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை.

கடந்த 2-ம் தேதி விக்கிரமசிங் கபுரம் அருகே இருசக்கர வாகனத் தில் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் பழனிகுமார் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பழனி குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட் டது. தனது மகன் உயிர் பிழைக்க முடியாது என்று தெரியவந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சாரதா சம்மதித்தார்.

பழனிகுமாரின் இதயம், 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகளை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர், பழனி குமாரின் இதயம் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி விமான நிலை யம் கொண்டு வரப்பட்டு அங்கி ருந்து விமானத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.

திருச்சி தனியார் மருத்துவம னைக்கு கல்லீரல், மதுரை அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம், கோவை தனியார் மருத்துவமனைக்கு தோல், திரு நெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு 2 கண்கள் தானமாக வழங்கப்பட்டன. பின்னர், உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x