Published : 04 Jan 2019 11:32 AM
Last Updated : 04 Jan 2019 11:32 AM

வீட்டின் முன் விளையாடிய குழந்தையை கடித்து குதறிய நாய்

ராமநாதபுரத்தில் 3 வயது பெண் குழந்தையை தெரு நாய் கடித்து குதறியது.

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகள் ஜீவா ஸ்டெர்லின்(3). இக்குழந்தை வீட்டின் முன் நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று ஜீவாவை கன்னத்தில் கடித்து விட்டு ஓடியது.

இக்குழந்தைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓம் சக்தி நகர், பட்டணம் காத்தான் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. இரவு நேரங்களில் நாய்கள் கடிக்க விரட்டுவதும், கடித்து விடுவதும் தொடர்கிறது.

எனவே, தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x