Published : 08 Jan 2019 08:21 AM
Last Updated : 08 Jan 2019 08:21 AM
முத்திரைதீர்வை சட்டம், ஜிஎஸ்டி, மதிப்பு கூட்டு வரி சட்டத்திருத்த மசோதாக்கள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவை முன்னாள் உறுப் பினர்கள், சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்கள் குடியரசு, சுதந்திர தினத்தன்று சென்னை வந்து செல்வதற்கான 2-ம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க வகை செய்யும் வகையில், தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோ தாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில், தாக்கல் செய்தார்.
அதேபோல், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறைபடுத் தும் சட்டத்தில் திருத்தத்தை அமைச் சர் கே.பி.அன்பழகன், தமிழ்நாடு தொழில் நகரிய பகுதி மேம் பாட்டு அதிகார அமைப்பு சட்டத் திருத்தத்தை அமைச்சர் எம்.சி. சம்பத், தமிழ்நாடு வேளாண் விளை பொருளை சந்தைப்படுத்துதல் திருத்தச்சட்ட மசோதாவை அமைச் சர் இரா.துரைக்கண்ணு, தமிழ் நாடு முத்திரை தீர்வை சட்டத் திருத்த மசோதா, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திருத்தம் மற்றும் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கே.சி.வீரமணி அறி முகப்படுத்தினார். தொழில் தகரா றுகள் சட்டத் திருத்த மசோ தாவை அமைச்சர் நிலோபர் கபீல் தாக்கல் செய்தார்.
இதில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத் துதல் சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பதாக திமுக எம்எல்எ. வேலு தெரிவித்தார். அனைத்து மசோதாக்களும் குரல் வாக்கெடுப் பின் மூலம் நிறைவேற்றப்பட் டன. இன்று இந்த மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு நிறை வேற்றப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT