Published : 17 Jan 2019 09:28 AM
Last Updated : 17 Jan 2019 09:28 AM

பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை கண்காணிக்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை

பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் போன்களை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரி கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத் துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர். மேலும் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய் மார்களுக்கு இணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் அங்கன் வாடி மையங்கள் மூலம் செயல் படுத்தப்படும் அனைத்து திட்டங் களுக்கும் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்தத் திட்டங்கள் பொதுமக் களுக்கு முழுமையாக சென்றடைவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. எனவே, அங்கன்வாடி மையங்களை கண்காணிக்க icds cas என்ற இணையதளம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்ளும் சிறிய பணிகள்கூட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போதைக்கு சென்னை, விழுப்புரம், அரியலூர், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பணி புரியும் அங்கன்வாடி பணியாளர் களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப் பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருவள் ளூர், திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட் டங்களில் பணிபுரியும் பணியாளர் களுக்கு அடுத்த மாதம் தொடக்கத் தில் ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பணிபுரியும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை மார்ச் மாதம் இறுதிக் குள் வழங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சுய விவரங்கள் பதிவு

இதுதொடர்பாக, ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி பணியாளர் களுக்கும் மார்ச் மாத இறுதிக் குள் ஸ்மார்ட் போன்கள் வழங்கப் படும். இந்த ஸ்மார்ட் போன் மூலம் இணைக்கப்பட்ட புதிய இணையதளத்தில் அங்கன் வாடியை திறந்தவுடன் ஊழியர்கள் உள்நுழைய(login) வேண்டும். அதன் பிறகு, திட்டங்களை செயல்படுத்தியவுடன் அந்தந்தப் பயனாளிகளின் புகைப்படத்துடன் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

டெல்லியில் இருந்து மத்திய அரசு அதிகாரிகள் இதனை கண் காணிக்கும் பணியில் ஈடுபடுவார் கள். இதன் மூலம், மக்களுக்கு அங்கன்வாடி திட்டங்கள் முழு மையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். இந்தத் திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் முழு வீச்சில் செயல்படுத்த திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x