Published : 01 Jan 2019 10:08 AM
Last Updated : 01 Jan 2019 10:08 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணத்தில் மர்மம் இருப் பது உறுதியாகி இருப்பதாகவும், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், முன்னாள் தலை மைச் செயலாளர் ராமமோகனராவ் இருவரையும் விசாரிக்க வேண்டும். இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை. இதை திமுக சார்பில் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். இந்த விவ காரத்தில் உண்மைகளை வெளிக் கொண்டுவர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT