Published : 11 Jan 2019 07:49 AM
Last Updated : 11 Jan 2019 07:49 AM

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை; பவுன் ரூ.24,608 

சர்வதேச அளவில் கடந்த 2 மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று புதிய உச்சத்தை தொட் டது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 608-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 76-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக நகைக்கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது.

அனைத்திந்திய நவரத்தினம் மற்றும் தங்க நகை வர்த்தக கூட்டமைப்பின் மண்டல குழு உறுப்பினர் பா.ரமேஷ் இதுபற்றி கூறும்போது, “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும்போதெல்லாம், தங்கம் விலை உயர்ந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x