Published : 05 Jan 2019 08:06 AM
Last Updated : 05 Jan 2019 08:06 AM
திருவாரூர் தொகுதியை இரண்டாவது ஆர்கே.நகராக மாற்றி வெற்றி பெறுவோம் என கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருவாரூரில் பெரிய வெற்றியைப் பெறுவோம். மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். திருவாரூரை இன்னொரு ஆர்கே.நகராக மாற்றி, அங்கும் வெற்றி பெறுவோம்.
திருவாரூரில் அதிமுக டெபாசிட் இழப்பது உறுதி. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைப் பார்க்க முடியவில்லை. தென்னை மரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
அதிமுக-அமமுக இணைய வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவைப்போல் வேறு யாரும் காவிரிக்காகப் போராடியது இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT