Published : 29 Jan 2019 09:47 AM
Last Updated : 29 Jan 2019 09:47 AM
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் படிப்படி யாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத் தைத் தொட்டது.
முதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25,016-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,127-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,121-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்வினால் தமிழ கத்தில் பெரும்பாலான நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறை வாக இருந்தது.
மேலும் உயரும்
இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வ தேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால், மற்ற தொழில்களில் முதலீடு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால், தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித் துள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வரு கிறது.
முதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. முகூர்த்த நாட்கள் நெருங்குவதால், தவிர்க்க முடியாத நிலையில் மக்கள் சிலர் தங்கம் வாங்கி வருகிறார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT