Published : 09 Dec 2018 08:46 AM
Last Updated : 09 Dec 2018 08:46 AM
மேகேதாட்டு அணை கட்டினால், தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்ப டும் என கிருஷ்ணகிரியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் தமாகா சார்பில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசு, ஆய்வு செய்து அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஜி.கே.வாசன் பேசியது: காவிரி பிரச்சினையில் தமிழகத் துக்கு முழுமையான தீர்வு கிடைக்க வில்லை. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசும், அதன் நீர்வள ஆணையமும் அனு மதி கொடுத்திருப்பது, வெந்த புண் ணில் வேல் பாய்ச்சுவதைபோல் உள்ளது. மேகேதாட்டுவில் இருந்து 15 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அமைந்துள்ள நிலையில், ஆய்வு செய்ய அனுமதிப்பது கர்நாடக அர சும், மத்திய அரசும் தமிழகத்தின் மீது தொடுக்கும் யுத்தம் ஆகும்.
புதிய அணைகள் கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை.
பஞ்சாப், ஹாரியாணா மாநிலங் களில் இருந்து அரிசி, கோதுமை பெற வேண்டிய நிலையில் தமிழ கம் உள்ளது. அணை கட்டினால், தமிழகத்தில் உணவு பஞ்சம், 15 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். இது விவசாயிகளின் பயிர் பிரச்சினை இல்லை, உயிர் பிரச்சினை.
எனவே, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். இதற்காக தமாகா தொடர்ந்து போராடும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT