Published : 18 Dec 2018 09:14 AM
Last Updated : 18 Dec 2018 09:14 AM

குமரியில் இருந்து காஷ்மீருக்கு இளைஞர் காங்கிரஸ் ரத யாத்திரை

இளைஞர் காங்கிரஸ் சார்பில், புரட்சி பயண ரத யாத்திரை நேற்று இரவு தொடங்கியது.

அகில இந்திய இளைஞர் காங் கிரஸ் சார்பில், ‘அரசியல் அமைப்பை காப்போம், தேசத்தை காப்போம்’ என்ற கோஷத்துடன், காஷ்மீர் வரை நடைபெறும் புரட்சி பயண ரத யாத்திரை நாகர் கோவிலில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ்தத் யாதவ், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஆருண், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

இந்த புரட்சி பயண ரத யாத்திரை தக்கலை, களியக்காவிளை, பாற சாலை வழியாக நேற்று இரவு திருவனந்தபுரத்தை அடைந்தது.

வழிநெடுகிலும் காங்கிரஸார் யாத்திரைக்கு வரவேற்பு அளித்தனர். பாலக்காடு வழியாக கோவை சென்று, பல்வேறு மாநிலங்கள் வழியாக காஷ்மீர் செல்லும் வகையில் இந்த ரத யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதி ரத யாத்திரை டெல்லியை அடைகிறது. அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக, செய்தியாளர் களிடம் திருநாவுக்கரசர் கூறிய தாவது:

‘‘அடுத்த பிரதமராக ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்த அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடகங்கள் கமல்ஹாசன் பற்றி முதலில் கேட்டு வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் பற்றி கேட் கின்றன. எந்த நிபந்தனையும் இல் லாமல் வரும் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைக்கப் படும்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சி பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. ஆனால் பட்டேல் சிலை அமைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்பவர்கள், புயல் பாதிப்புகளுக்கு செலவு செய்ய தயங்குகின்றனர்.

கட்சியின் நிலைப்பாடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x