Published : 24 Dec 2018 03:24 PM
Last Updated : 24 Dec 2018 03:24 PM
அடுத்த ஆண்டு கோடை காலம் மழைக் காலமாக அமையும் என தன்னார்வ வானிலை ஆராய்ச்சியாளர் என்.செல்வக்குமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற ‘வானிலை-அறிவியல் பார்வை’ எனும் கருத்தரங்கில் அவர் பேசியது: தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரியில் இருந்து வளிமண்டல வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதால், அப்போது படிப்படியாக மழை அளவும் உயரும். மார்ச் 21 முதல் மே 21-வரை மிக கனமழை பெய்யலாம். எனவே, வரும் கோடை காலம் மழைக் காலமாக அமையும். வறட்சியை முற்றிலும்போக்கும் விதமாக இந்த மழை இருக்கும் என்றார்.
அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசியது: ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்காகவே டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பொய் பிரச்சாரங் களை முறியடிப்பதற்கு மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வு அவசியமாகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT