Published : 11 Dec 2018 08:54 AM
Last Updated : 11 Dec 2018 08:54 AM

போதிய வருமானம் இல்லாததால் விரக்தி: குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை

போதிய வருமானம் இல்லாத தால் விரக்தியடைந்த காவலாளி தனது ஒன்றரை வயது மகனை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரை அடுத்த பனையூர் 7-வது அவென்யூவை சேர்ந்தவர் சுரேஷ் (30). காவலாளியாக வேலை செய்து வந்தார். ஏ.சி. பழுதுபார்க்கும் பணிக்கும் அவ் வப்போது சென்று வருவார். இவரது மனைவி ஜெயா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் கிஷோர்.

எப்படி படிக்க வைப்பது?

சுரேஷின் வருமானம் குறைவு என்பதால், குடும் பத்தை நடத்த மிகவும் சிரமப் பட்டுள்ளார். குறைந்த சம்பளத் தில் அன்றாட வாழ்க்கை நடத் துவதே கஷ்டமாக இருக்கும் போது, குழந்தையை எப்படி படிக்க வைப்பது என்று மனைவி யிடம் அடிக்கடி கூறி வருத்தப் பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை ஜெயா கண் விழித்துப் பார்த்த போது, வீட்டின் அறையில் சுரேஷ் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பாலில் விஷம் கலந்து கொடுத்து, கொல்லப்பட்ட நிலை யில் அருகில் குழந்தை கிஷோர் சடலம் கிடந்தது. இதைப் பார்த்து ஜெயா கதறி அழுதார்.

சத்தம் கேட்டு அக்கம் பக் கத்தினர் திரண்டனர். தகவல் அறிந்து கானாத்தூர் போலீஸார் விரைந்து வந்தனர். 2 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

சுரேஷின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்துள்ளது. ‘‘எனக்கு போதிய வருமானம் இல்லாததால், மகனை கொன்று தற்கொலை செய்துகொள் கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என் அப்பா, அம்மாவிடம் யாரும் சண்டை போட வேண்டாம் என் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம்’’ என்று அதில் எழுதப்பட்டிருந்ததாக போலீ ஸார் கூறினர்.

விஷம் கொடுத்து குழந் தையை கொன்றுவிட்டு, சுரேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தெரியும் என்று போலீஸார் கூறினர். இருவரின் இறப்பு குறித்து ஜெயாவிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x