Published : 11 Dec 2018 05:21 PM
Last Updated : 11 Dec 2018 05:21 PM
பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட இனிய நாள் வந்துவிட்டது என, மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக ஆளும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிக வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் பாஜகவை தோற்கடித்து அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை விட காங்கிரஸ் ஒரு சில இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், 5 மாநிலங்களிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள்" என பதிவிட்டுள்ளார்.
The much promised #AccheDin #GoodDay has finally arrived. @RahulGandhi
பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள். #Results2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT