Published : 18 Dec 2018 09:13 AM
Last Updated : 18 Dec 2018 09:13 AM

துரைப்பாக்கம் கண்ணகி நகரில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

துரைப்பாக்கம் கண்ணகி நகரில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஏ.பாபு (30). ஆட்டோ ஓட்டுநரான இவர் விமலா (27) என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிஷோர் (6) என்ற மகனும், தியா (4) என்ற மகளும் உள்ளனர். பாபுவுக்கு குடிப் பழக்கம் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால விமலா அடிக்கடி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்று விடுவாராம்.

கடந்த 11-ம் தேதி சண்டை போட்டுக் கொண்டு திருக்கழுக்குன்றம் சென்ற விமலாவை நேற்று முன்தினம் கண்ணகி நகருக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பிறகு நேற்று மாலை 6 மணி வரை பாபு வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் குரல் எழுப்பியும் யாரும் பதிலளிக்க வில்லை. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மனைவி, 2 குழந்தைகளை கொன்று விட்டு பாபுவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த கண்ணகி நகர் போலீஸார் 4 பேரின் உடல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x