Published : 06 Dec 2018 10:49 AM
Last Updated : 06 Dec 2018 10:49 AM

7 மணி நேரம் தவில் வாசித்த விருதுநகர் வித்வான்

உலக சாதனை முயற்சியாக விருதுநகரில் தவில் வித்வான் ஒருவர் தொடர்ந்து 7 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்து சாதனை படைத்தார்.

விருதுநகர் காசுக்கடை பஜாரைச் சேர்ந்தவர் தவில் வித்வான் எம்.ராமசாமி (58). உலக சாதனை முயற்சியாக நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து சுமார் 7 மணி நேரம் தவில் வாசித்து சாதனை படைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு’ முதன்மை நிர்வாக இயக்குநர் சமன்பலே, முதுநிலை மேலாளர் காந்த், தமிழக ஒருங்கிணைப்பாளர் ஷைலஜா ஆகியோர் இச்சாதனையைப் பதிவு செய்தனர்.

விருதுநகரில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக இசை விழா நடத்தி வரும் தவில் வித்வான் ராமசாமி, அதில் பல்வேறு இசைக் கலைஞர்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x