Published : 22 Dec 2018 08:52 PM
Last Updated : 22 Dec 2018 08:52 PM
சர்கார் பட விவகாரத்தில் போராட்டம் நடத்திய அதிமுகவினரை மிரட்டும் வகையில் அரிவாளை காட்டி மிரட்டி காணொளி வெளியிட்ட விஜய் ரசிகர்களில் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்தது. இந்த படத்தில் சில வசனங்களை நீக்குமாறு அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினர். தமிழகம் முழுதும் தியேட்டர் முன் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் சென்னையில் 2 திரையரங்குகளை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய அதிமுகவினரை மிரட்டும் வகையில் பட்டாபிராமைச் சேர்ந்த லிங்கதுரை உள்ளிட்ட 3 பேர் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டனர்.
அவர்கள் 3 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி லிங்கதுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், லிங்கதுரைக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT