Last Updated : 07 Dec, 2018 02:04 PM

 

Published : 07 Dec 2018 02:04 PM
Last Updated : 07 Dec 2018 02:04 PM

மேகேதாட்டு விவகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது

மேகேதாட்டு  அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டப்பேரவை வருகிற 14-ம் தேதி  கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட்ராயர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கில் மேகேதாட்டு எனுமிடத்தில் கர்நாடக அரசு இடத்தில் அணை கட்டுவதால், புதுச்சேரியின் காரைக்கால் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. இதை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

இதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வருகிற 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட்ராயர் இன்று வெளியிட்டார்.

சில நாட்கள் முன்பு சிறப்பு சட்டப்பேரவை கூட்ட தொடரை நடத்தக்கோரி திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகர் வைத்திலிங்கம் அறையில் தர்ணா போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x