Published : 21 Dec 2018 08:34 AM
Last Updated : 21 Dec 2018 08:34 AM

பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்க வேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத் தினார்.

பாஜக மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் கடந்த 2 நாட்களாக வேலூரில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

பாஜக தன் அடிப்படை கட்ட மைப்பை பலப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி 39 நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் விரைவில் கலந்துரையாட உள் ளார். 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும்.

திமுக பலமான கூட்டணி அமைத்து விட்டதாக கூறி வருகி றார்கள். ராகுல் காந்தி பிரதமர் என்பதை அவர்களது கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. அதன் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இது கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் காழ்ப்புணர்ச்சி அரசியல் நடக்கிறது. மேகேதாட்டு வில் அணை கட்டுவதற்கு தமிழக பாஜக என்றுமே எதிர்ப்பு தெரி விக்கும். தமிழக இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x