Last Updated : 03 Nov, 2018 11:48 PM

 

Published : 03 Nov 2018 11:48 PM
Last Updated : 03 Nov 2018 11:48 PM

இலங்கை நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை; ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு: மஹிந்த ராஜபக்ச அரசு தப்புமா?- அணி மாறிய எம்பிக்கு அமைச்சர் பதவி

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்நிலையில், இரண்டு

கட்சிகளுக்கும் இடையே சில மாதங் களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுதந்திரக் கட்சி கடந்த மாதம் 26-ம் தேதி விலக்கிக் கொண்டது.

மேலும் ரணில் விக்ரம சிங்கவை பிரதமர்  பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்‌சவை  பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை ஏற்க மறுத்த ரணில்,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நானேபிரதமர் என அறிவித்தார். சிறிசேனா- ராஜபக்ச கூட்டணிக்கு 95 உறுப்பினர் கள் மட்டுமே உள்ளனர். ஆனால், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இதனால்  இலங்கை நாடாளுமன் றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் சட்டப்பூர்வ பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீ கரித்தார்.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பும் முயற்சி  செய்தன. அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது.

அணி தாவிய தமிழ் எம்பி

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியா

ழேந்திரன் ராஜபக்ச அணிக்கு தாவி னார். அவருக்கு உடனடியாக கலாச் சார, உள்விவகார மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதமரை பதவி நீக்கம் செய் யும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது.

அதிபரின்  அறிவிப்பு அரசியலமைப் புக்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து விட்டு, பெரும்பான்மையை அவர் நிரூ பிப்பதற்கு கால அவகாசம் வழங்கு வதற்காகவே நாடாளுமன்றத்தை அதி பர் சிறிசேனா முடக்கி உள்ளார்.இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி அமைச்சர் பதவியையும் பணத் தையும் லஞ்சமாகக் கொடுத்து தங்கள் பக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிசேனா- ராஜபக்ச தரப்பினர் இழுக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இந்த சதிக்குப் பலியானது கடும் கண்டனத்துக் குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜ பக்ச அரசுக்கு எதிராக ரணில் விக்ரம சிங்க  கொண்டு வரும் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x