Published : 21 Aug 2014 10:01 AM
Last Updated : 21 Aug 2014 10:01 AM

சென்னையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: 4 பேர் பலி

சென்னை புறநகர் பகுதியில், தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒடிசா மாநில இளைஞர்கள் இருவர் உள்பட 4 பேர் பலியாகினர்.

சென்னை ஆவடி - பூந்தமல்லி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று அமைந்துள்ளது.

இந்த குடோனில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த 15 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தது.

சம்பவம் நடந்தபோது, குடோனில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரத், திருச்செந்தூரைச் சேர்ந்த ரகு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமர் மற்றும் ராஜா இருந்தனர். இவர்கள் நால்வரும் வழக்கமாகவே குடோனில்தான் தங்குவர். வழக்கம்போல் குடோனில் இருந்த ஒரு அறையில் நால்வரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, தீ விபத்தில் சிக்கி 4 பேரும் உடல் கருகி இறந்தனர்.

சம்பவம் குறித்து திருவேற்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x