Published : 29 Nov 2018 09:56 AM
Last Updated : 29 Nov 2018 09:56 AM

தமிழக அரசுக்கு ரெங்கநாதன் கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தற்போது புதிய அணையை மேகேதாட்டுவில் கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. குடிநீர் தேவைக்காக கட்டுவதாக கர்நாடகம் கூறுகிறது.

ஆனால், 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, குடிநீர் தேவைக்கான 14.25 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றமே தமிழகத்திடமிருந்து பெற்று வழங்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலம் இருந்தபோது, மேகேதாட்டுவிலும், ஒகேனக்கலிலும் மின் உற்பத்திக்கு, சுமார் 5 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை மறைத்து கர்நாடகம் தற்போது, மேகேதாட்டுவில் வேறொரு இடத்தில் 66 டிஎம்சி கொள்ளளவுக்கு ஒரு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் தேக்கிநிறுத்திவிட அம்மாநிலம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையறிந்து கொண்டே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுவது தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும்.

தமிழக காவிரி டெல்டா பகுதிகள் புயல் தாக்கியதில் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில், அரசும், மக்களும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு சப்தமில்லாமல் கர்நாடகத்தின் நடவடிக்கைக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இதை விவசாயிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x