Published : 26 Nov 2018 10:59 AM
Last Updated : 26 Nov 2018 10:59 AM

கஜா புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு அழிந்தன; பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை

'கஜா' புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு உள்ளிட்டவை சேதமானதால், மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் வயது 45.  'கஜா' புயலால் இவருக்கு சொந்தமான 30 ஏக்கரிலான பலா, தேக்கு, சவுக்கு, நெல் உள்ளிட்டவை சேதமடைந்தன.

இதனால், கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக கடந்த சனிக்கிழமை நெல்லுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை பார்த்த அவரது வீட்டார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி திருச்செல்வம் இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்தார். இவர் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x