Published : 25 Aug 2014 10:00 AM
Last Updated : 25 Aug 2014 10:00 AM

நீர் சறுக்கு விளையாட்டில் இந்தியர்கள் முதலிடம்

புதுவையில் நீர் சறுக்கு விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. முதல் இரு நாட்கள் தகுதிச் சுற்று போட்டிகள் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டிகள் நடந்தன. புதுவை அரசின் சுற்றுலாத் துறையும், ஆரோவில்லில் உள்ள நீர் சறுக்கு விளையாட்டு பள்ளியும் இணைந்து இப்போட்டியை நடத்தின.

போட்டியில் கோவளம், மகாபலிபுரம், கேரளா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் சுவீடன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 70 வீரர்கள் பங்கேற்றனர்.

சிறந்த நீர் சறுக்கு வீரருக்கான பரிசை கோவளத்தைச் சேர்ந்த ராகுல் வென்றார். நம்பிக்கை நட்சத்திர வீரராக கேரளத்தைச் சேர்ந்த ரமேஷ் தேர்வானார். ஆரோவில் நீர்சறுக்கு விளையாட்டு பள்ளியைச் சேர்ந்த சுகாசினி பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார். ரஷ்யாவைச் சேர்ந்த ஓல்கா 2ம் இடம் பிடித்தார்.

16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் கோவளம் அப்பால் அலி முதலிடமும், ஆரோவில் நீர்சறுக்கு விளையாட்டு பள்ளியை சேர்ந்த பெர்சி 2ம் இடமும் பிடித்தனர். 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கோவளத்தைச் சேர்ந்த தரணி முதலிடமும், முன்னு 2ம் இடத்தையும் பிடித்தனர்.

சீனியர் பிரிவில் ஜூவா ரெபோல் (ஆரோவில் நீர்சறுக்குபள்ளி) முதலிடமும், கேரளத்தைச் சேர்ந்த மூர்த்தி 2ம் இடமும் பிடித்தனர். போட்டிகளில் வென்றோருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x