Published : 23 Nov 2018 10:29 AM
Last Updated : 23 Nov 2018 10:29 AM
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சிலை கடத்தல் சிபிஐ விசார ணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதே வன், ஆதிகேசவலு அடங் கிய அமர்வு, சிபிஐ விசார ணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள், ‘‘சிலை கடத்தல் தொடர்பாக இந்த நீதிமன்றம் ஒரு தனிப்பிரிவு அமைத்து விசாரிக்க உத்தரவிட் டுள்ள நிலையில் சிபிஐ விசார ணைக்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்’’ என்று கூறி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT