Published : 06 Nov 2018 01:38 PM
Last Updated : 06 Nov 2018 01:38 PM
அனுமதிக்கப்படாத நேரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிற்பாடு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.
இந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடிவெடித்ததாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT