Published : 12 Nov 2018 02:36 PM
Last Updated : 12 Nov 2018 02:36 PM

ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும்: தொல்.திருமாவளவன் இலங்கையில் பேட்டி

ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள தொல்.திருமாவளவன், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் கெ.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும் என்கிற முழக்கத்தை முன்வைத்து, ஈழம் ஒன்றே தீர்வு என்கிற கருத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கிறது.

இன்றைக்கு அது பொருந்துவதாக இல்லாமல் இருக்கலாம். அதனை பேசுவது சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாட்டை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு ஈழம் தான்” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x