Last Updated : 03 Nov, 2018 05:10 PM

 

Published : 03 Nov 2018 05:10 PM
Last Updated : 03 Nov 2018 05:10 PM

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கோவையில் கடந்த 30 மற்றும் 31-ம் தேதி டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் அமுதன் (5).இவர் கடந்த மாதம் 30-ம் தேதி விஷ காய்ச்சலின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுவனுக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுவனின் உடல்நிலை மோசமானதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல, திருப்பூர் மாவட்டம் தாசப்பா நகரைச் சேர்ந்த ராஜனின் மனைவி வசந்தா (63). இவர் கடந்த 31 ஆம் தேதி பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் மனைவி சுமத்ரா (35). இவர் கடந்த 30-ம் தேதி காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x