Published : 23 Nov 2018 08:49 AM
Last Updated : 23 Nov 2018 08:49 AM

தென்னை இழப்பை தாங்க முடியாமல் ஒரத்தநாடு விவசாயி உயிர் துறந்தார்: மற்றொரு விவசாயி மாரடைப்பால் மரணம்

'கஜா' புயலால் தனது 5 ஏக்கர் நிலத்தில் இருந்த நூற்றுக்கணக் கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால், இழப்பை தாங்க முடி யாத விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னை யன் மகன் சுந்தர்ராஜ்(57). இவ ருக்கு மனைவி அம்சவள்ளி, மகன் சுதாகரன், மகள் சுதா ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளார். சிறிய ஓட்டு வீட்டிலேயே இவரது குடும்பம் வசித்து வருகிறது.

விவசாயி சுந்தர்ராஜ், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். மேலும் ஒரு ஏக்கரில் தேக்கு மரங்களும் வளர்த்து வந்தார். இவருக்கு நெல் வயல் ஏதும் இல்லாததால், வாழ்வாதாரத்துக்காக தென்னை, தேக்கு மரங்களை மட்டுமே நம்பியிருந்தார்.

தனது நிலத்தில் வளர்ந்த தென்னை மரங்களை பராமரிக் கவும், விலை உயர்ந்த தேக்குக் கன்றுகளை வாங்கி, நட்டு வளர்க் கவும், போர்வெல் அமைக்கவும் இவர் கடன் வாங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி அதிகாலை வீசிய கஜா புயலால் சுந்தர்ராஜ் தென்னந்தோப்பில் இருந்த 400 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. மேலும், ஒரு ஏக்கரில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களும் விழுந்து சேதமடைந் தன. இதனால், இழப்பைத் தாங்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக மனத் துயரில் சுந்தர்ராஜ் புலம்பி வந்துள்ளார்.

அவரை தேடிச் சென்ற உறவினர் கள், அவரது சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அவரது சட லத்தை ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.

மற்றொரு விவசாயி மரணம்

இதேபோல, புயலால் தனது குடும்பத்தின் வாழ்வாதாரமான ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் விழுந்து அழிந்ததாலும், மரங்கள் விழுந்ததாலும் வசித்து வந்த ஓட்டு வீடு கடும் சேதமடைந்ததாலும் மனவேதனையில் தவித்து வந்த ஒரத்தநாடு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி (52), நேற்று மார டைப்பால் உயிரிழந்தார். நேற்று மாலை தனது தென்னந்தோப்பை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர், யாரிடமும் பேசாமல் இருந்துள் ளார். திடீரென மாரடைப்பு ஏற்பட்ட தில் அங்கேயே உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி குணமதி, பி.எஸ்ஸி படித்துவிட்டு திருமண மான மகள் பாரதி, எம்எஸ்சி அக்ரி படித்துவிட்டு வேலையில்லா ததால் குடும்பத்துக்கு உதவியாக விவசாய வேலைகளுக்கு சென்று வரும் மகன் ஆனந்த், மற்றொரு மகன் கார்த்தி ஆகியோர் உள்ளனர்.

வீடு சேதமடைந்ததால், அருகில் உள்ள தன் தம்பியின் வீட்டில் குடும்பத்தினருடன் சிவாஜி வசித்து வந்துள்ளார். இவருக்கு வேறு நிலம் எதுவும் இல்லை என்றும், புயலுக்குப் பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்துவந்தார் என்றும் உறவினர்கள் தெரி வித்தனர். இவரது மரணம் குடும் பத்திரையும், கிராமத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மரணம் குறித்து தகவ லறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சிவாஜி யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரி வித்தார். கீழவன்னிப்பட்டு கிராமம் சி.மகேந்திரனின் சொந்த ஊராகும். இதேபோல, சுந்தர்ராஜின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் சி.மகேந்திரன் ஆறுதல் கூறினார்.

கூலித் தொழிலாளி மரணம்

ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாட்டை அடுத்த ஆம்பலாப் பட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்(40), கஜா புயலில் இவர் வசித்த ஓட்டுவீடு தரை மட்டமானதில் இடிபாடுகளில் சிக்கினார். 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x